Header Ads



3 மாணவர்களும், ஆசிரியரும் உயிரிழப்பு


மட்டக்களப்பு மாவட்டம் களுமுந்தன்வெளி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் உட்பட மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.


மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிலுள்ள தாத்தாமலை 40 வட்டை குளத்தின் துருசில் இருந்து குளத்தில் ஆசிரியர் ஒருவர் மற்றும் 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) பகல் ஒரு மணிக்கு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


களுமுந்தன்வெளியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசிரியர் மற்றும் 16 வயதுடைய மாணவர்களான தயாபரன் சஜித்தன், சத்தியசீலன் தனு, வீரசிங்கம் விதுசன் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


களுமுந்தன்வெளி அரச தமிழ் கலவன் பாடசாலையில் கா.பொ.த.சாதாரண தரத்தில் கல்விகற்றுவரும் 3 ஆண் மாணவர்களும் 4 பெண் மாணவர்களும் ஆசியரியருமாக 8 பேர் சம்பவதினமான இன்று ஒன்றிணைந்து தாந்தாமலை பகுதிக்கு சுற்றலா சென்றுள்ளனர்.


சுற்றுலா சென்ற இவர்கள் அந்த பகுதியிலுள்ள சிறிய குளமான 40 வட்டை குளத்தின் தோனியில் சென்ற போது படகு கவிந்து 3 மாணவர்களும் ஆசிரியரும் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர், ibc

No comments

Powered by Blogger.