Header Ads



இலங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு 5 நீல இரத்தினக்கற்கள் கிடைத்தன


கதிர்காமம் - கொச்சிபத்தான பகுதியில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு இவ்வாறு அதிஷ்டம் கிடைத்துள்ளது. 


கதிர்காமம் யாத்திரைக்கு செல்லுபவர்களுக்காக, பூசைத் தட்டுகளை விற்பனை செய்யும் மூன்று வர்த்தகர்களுக்கே, 5 நீல இரத்தினக்கற்கள் கிடைத்துள்ளன.


கதிர்காமம்-கொச்சிபத்தான பகுதியில் அண்மைக் காலமாக, இரத்தினக்கல் தோண்டும் பணிகள் இடம்பெறுகின்றன.


இந்தநிலையில், மூன்று பேருக்கு 5 இரத்தினக்கற்கள் கிடைத்ததை அடுத்து, அந்த இடத்திற்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த மூவருக்கும் கிடைத்த 5 இரத்தினக்கற்களும், எலஹர பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு, சுமார் ஒரு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக  செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.