Header Ads



மொட்டையும், ரணிலையும் JVP ஒதுக்கிவிட்டு சஜித்தை தாக்கி, தமக்குத் தாமே குழிகளை வெட்டுகின்றனர்


ஐக்கிய இடதுசாரி முன்னணி மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று(08) பிற்பகல் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.


நாடு ஏற்கனவே மிகவும் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாகவும்,மாளிகை அரசியல் தற்போது நாட்டுக்கு ஏற்றதல்ல என்றும்,ஜனாதிபதி மாளிகை,அலரி மாளிகை போன்ற மாளிகைகள் தொழில்நுட்ப மற்றும் கணினி மையங்களாக மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இங்கு சுட்டிக்காட்டினார்.மாளிகை அரசியல் விரைவில் முடிவுக்கு வரும் என்றும்,மக்கள் நலனுக்காக அனைத்தையும் மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


ஜே.வி.பி பாசாங்குத்தனமானது, தங்களுக்கு தங்களே குழிவெட்டிக்கொள்கின்றனர்


சமீர பெரேரா


தற்போது மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மிகவும் கபட அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் தமது குழிகளை தாங்களே வெட்டிக் கொள்வதாகவும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட சமீர பெரேரா தெரிவித்தார்.


பொது எதிரியான மொட்டுவவையும், ரணில் விக்கிரமசிங்கவையும் மக்கள் விடுதலை முன்னணியினர் ஒதுக்கி வைத்துவிட்டு சஜித் பிரேமதாஸவை தாக்குவதற்கு தெரிவு செய்துள்ளதாக தெரிவித்த சமீர பெரேரா மிகவும் பொறாமைத்தனமான முறையில் விமர்சனங்கள் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.