Header Ads



மீண்டும் பல்டி அடிப்பாரா பீரிஸ்..?


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவியை மீண்டும் ஒருமுறை பெற்றுக்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.


கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


பீரிஸ் மீண்டும் தமது கட்சிக்கு திரும்புவார் என்றும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக நீடிப்பார் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.


பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தற்போது அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும உட்பட சுமார் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர்.


உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஜி.எல்.பீரிஸ் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொள்வார் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.