Header Ads



ஜனா­ஸா தொழுகைக்கும், நல்­ல­டக்கத்திற்கும் மறுத்த பள்­ளி­வாசல் நிர்­வா­கம் - குடும்பத்தினர் மேற்கொண்ட தீர்மானம்


ஐஸ் போதைப்­பொருள் பாவ­னை ­கார­ண­மாக வவு­னியா புனர்­வாழ்வு நிலை­யத்தில் புனர்­வாழ்வு பெற்­று­வந்த நப­ரொ­ருவர் கடந்த 10 ஆம் திகதி மர­ண­ம­டைந்­துள்ளார்.


வாழைச்­சேனை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பகு­தியைச் சேர்ந்த நபர் ஒரு­வரே இவ்­வாறு புனர்­வாழ்வு பெற்று வந்த நிலையில் மர­ண­ம­டைந்­துள்ளார்.


35 வய­து­டைய இரண்டு பிள்­ளை­களின் தந்­தை­யான இவர் சுமார் மூன்­றரை மாதங்­க­ளாக வவு­னியா புனர்­வாழ்வு நிலை­யத்தில் புனர்­வாழ்வு பெற்­று­வந்த நிலையில், மர­ண­ம­டைந்­த­தாக குடும்ப உறுப்­பினர் ஒருவர் தெரி­வித்தார்.


இவ்­வாறு மர­ண­ம­டைந்த நபரின் ஜனா­ஸாவை தொழுகை நடாத்தி நல்­ல­டக்கம் செய்ய அவர் வசித்­து­வந்த பகுதியிலுள்ள மாஞ்­சோலை ஜும்ஆப் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தினர் மறுப்பு தெரி­வித்­தனர்.


இந்­நி­லையில் மர­ண­ம­டைந்த குறித்த நபரின் ஜனா­ஸாவை அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்கள் முன்னின்று தொழுகை நடாத்தி, குறித்த பள்ளிவாசல் மையவாடியிலேயே நல்லடக்கம் செய்தனர்.– Vidivelli

(எச்.எம்.எம்.பர்ஸான்)



1 comment:

  1. புனர்வாழ்வு நிலையத்தில் பல வருடங்கள் கழிந்த நிலையில் மரணித்தவரை அல்லாஹ் நிச்சியம் மன்னிக்கக் கூடும். அத்தகைய ஒரு மையத் தொழுவிக்கவும் அடக்கம் செய்யவும் பள்ளி நிர்வாகம் மறுப்பது நியாமற்றது. மனிதன் செய்யும் தவறுகளுக்கு மனிதனால் தண்டனை கொடுக்க முடியாது .அவ்வாறு செய்வது உலகில் நீதிமன்றங்கள் மாத்திரம் தான், அவர்களுடைய நீதியும் வெறுமனே சாட்சிகளையும் வாதத் திறமைகளையும அடிப்படையாக வழங்கப்படும் தீர்ப்பு , அவை இறதியான தீர்ப்பல்ல. நபியவர்களின் வாழ்க்ைகயில் பல சந்தர்ப்பங்களில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் ஒருபோதும் மற்ற மனிதனுக்கு தண்டனை வழங்க எத்தனிக்கக்கூடாது இதனைத்தான் Law unto hand எனப்படும் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ய யாரும் முற்படக்கூடாது. அது அழிவையும் நாசத்தையும் தான் இறுதியில் ஏற்படுத்தும்.

    ReplyDelete

Powered by Blogger.