Header Ads



பொதுஜன பெரமுன ஒருபோதும் தோற்ற கட்சியல்ல, எந்தத் தேர்தல் நடந்தாலும் வெற்றியடைவோம் - மகிந்த


எந்தத் தடைகளும் இன்றி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்தால், அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றியடையும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடர்பில் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் நேற்று -17- நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், 


உள்ளூராட்சி சபைத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என எந்தத் தேர்தல் நடந்தாலும் அதனை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளது.


எந்தத் தேர்தல் நடந்தாலும் எமது கட்சியே வெற்றியடையும். அந்த நம்பிக்கையுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை நீங்கள் முன்னெடுக்க வேண்டும். தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் தோற்ற கட்சி அல்ல.


அதை எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குச் செவிசாய்க்காமல் மக்கள் மத்தியில் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும்.


மக்களுக்கு உண்மை நிலைமையை நாம் தெளிவுபடுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

1 comment:

  1. ​மொட்டுக்கூட்டத்தையும், ஐதேகயின் கூட்டத்தையும் ஒவ்வொரு கிராமங்களிலும் வரவேற்க பொதுமக்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஊர் ஊராக பால்சோறும், பாலானமும் அழகாகக்கிடைக்கும். ஏன்கனவே அதற்கான பதாதைகளும், வரவேற்புச் சுவரொட்டிகளும் ஒட்டப்படுவிட்டன. மஹிந்தவின் போஹோட்டுவ கூட்டமும் ரணில் ராஜபக்ஸவின் கூட்டமும் அங்கு செல்வது தான் தாமதம். அத்தனை வரவேற்புகளும் சிறப்பாகக் கிடைக்கும். அத்துடன் பெருமபாலானோர் அரசியலையே மறந்துவிடும் வாய்ப்பு அதிகம் என்ற கருத்து அங்குமிங்கும் வலுப்பெற்று வருகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.