Header Ads



அமைச்சரின் தொலைபேசியை கிரியெல்ல ஒட்டுக்கேட்டாரா..? சபநாயகர் கேட்டும் பதிலளிக்க மறுப்பு


ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தனது தொலைபேசியை ஒட்டுக்கேட்டதாக நீதியமைச்சர் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று -18- குற்றம்சுமத்தியுள்ளார் . 


ஜனாதிபதியும் பிரதமரும் தம்முடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு , தம்மை விமர்சித்ததாக கிரியெல்ல தெரிவித்த கருத்து தொடர்பிலேயே விஜயதாச ராஜபக்ச இந்த குற்றச்சாட்டை சுமத்தினார் . 


இது ஒரு தீவிரமான பிரச்சினை என்று குறிப்பிட்ட அவர் , தமது தொலைபேசி உரையாடல்களை அவர் ஒட்டுக்கேட்டு கொண்டிருக்கிறார் என்று குற்றம் சுமத்தினார் . 


தனக்கு எதிராக சேறு பூசும் பிரசாரத்தில் லச்ம கிரியெல்ல ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் குறைகூறினார் . இந்தநிலையில் , ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சருடன் தொடர்கொண்டமை எப்படி தெரியவந்தது என்று , சபாநாயகர் , லச்மன் கிரியெல்லவிடம் கேட்டபோது , லச்மன் கிரியெல்ல , அதற்கு பதிலளிக்கவில்லை 

No comments

Powered by Blogger.