Header Ads



உள்ளுராட்சித் தேர்தல் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் ஆராய்வு


எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் விதம் குறித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் "தாருஸ்ஸலாம்"தலைமையகத்தில் இன்று(6) மிகவும் விரிவாக ஆராயப்பட்டது. 


பிரஸ்தாப தேர்தல் தொடர்பில் கொழும்பு மாநகர சபை உட்பட கொழும்பு மாவட்டம், புத்தளம் மாவட்டம், பதுளை மாவட்டம், குருநாகல் மாவட்டம், கம்பஹா மாவட்டம்,வன்னி மாவட்டம் மற்றும் கேகாலை மாவட்டம் போன்றவற்றிற்கான முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடனான சந்திப்புகளும் கட்சித் தலைவர் ஹக்கீம் அவர்களுடன் தனித்தனியாக இடம்பெற்றன. இவற்றில் கட்சியின் தேசிய அமைப்பாளர் எம்எஸ். தௌபீக் எம்.பி.யும் கலந்துகொண்டார்.


அத்துடன், இந்தத் தேர்தல் குறித்தான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட நிருவாக உத்தியோகர்களுடனான கலந்துரையாடலும் வெள்ளிக்கிழமை (6) மாலையில் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோர் முன்னிலையில் "கட்சியின் தாருஸ் ஸலாம்" தலைமையகத்தில் நடைபெற்றது.

No comments

Powered by Blogger.