Header Ads



கோழி, முட்டைகளுடன் சுதந்திர தினத்திற்கு செல்லப் போவதாக எச்சரிக்கை


75 ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதிக்குள் தற்போதைய முட்டை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், இல்லையெனில் கோழிகள் மற்றும் சேவல்களின் சத்தம் மக்களுக்கு கேட்கும் என அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இந்த அரசாங்கத்தால் பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால், கோழி மற்றும் முட்டைகளுடன் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு அணிவகுத்துச் செல்வோம் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.


இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


“நாட்டின் முட்டைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக பொது நிறுவனங்களுக்கான குழு (கோப்) அதன் வரலாற்றில் முதல் முறையாக நுகர்வோர் விவகார ஆணையத்தை சந்திக்க வேண்டியிருந்தது என்பதைக் கேட்பது வெட்கக்கேடானது,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


முட்டை பிரச்சினையை தீர்க்காமல் நாட்டை கட்டியெழுப்புவதில் இந்த அரசியல்வாதிகள் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்பது கேள்வியாக உள்ளது.


“அவர்கள் அரசியலமைப்புகள் மற்றும் பல பெரிய தலைப்புகளைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் முட்டை பிரச்சினையை தீர்க்க முடியாது.”


எவ்வாறாயினும், பெப்ரவரி 4 ஆம் திகதிக்குள் இந்த முட்டைப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், துப்பாக்கி வேட்டுக்களின் மத்தியில் கோழிகள் மற்றும் சேவல்களின் சத்தையும் மக்கள் கேட்கக்கூடும் என்றும் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.