Header Ads



தேர்தலை மக்கள் எதிர்பார்க்கவில்லை என, ஜனாதிபதி பொய் கூறினாரா..?


தற்போதைய சூழலில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை மக்கள் எதிர்பார்க்கவில்லை என, ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக, வார இறுதி பத்திரிகைகள் செய்தி வௌியிட்டுள்ளன.


தெரிவு செய்யப்பட்ட ஊடகங்களின் பிரதிநிதிகளுடன், ஜனாதிபதி கலந்துரையாடிய போது, இதனை குறிப்பிட்டதாக பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


உள்ளூராட்சி மன்ற தேர்தல் விடயத்தில், நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் பார்க்க வேண்டியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில், தான் அதில் பங்கேற்க போவதில்லை என, ஜனாதிபதி குறிப்பிட்டிருந்ததாக  பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. இங்கே மற்றுமொரு முக்கியமான விடயம் தவறுதலாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லத் தயாராகிக் கொண்டிருக்கின்றது. அந்த தீர்ப்பு என்ன என்பதை அனைத்து எதிர்க்கட்சிகளும் கூறிவிட்டார்கள். எல்லா பின்கதவு முயற்சிகளும் தோல்வியடைய நீதிமன்றத்தின் தீர்ப்பை நாடியிருக்கின்றனர். எந்த நாட்டில் நீதியும், சட்டமும் பாராபட்சமாக நடைபெறுகின்றதோ, அங்கு வாழ்வதை விட மடிந்து செத்துப் போனால் அது வாழ்வதை விட நன்மைபயக்கும் என்பது தான் வரலாற்று உண்மை.

    ReplyDelete

Powered by Blogger.