Header Ads



இரங்கல் தெரிவிப்பதற்கு அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு ஜனாதிபதி விஜயம்


முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆவது பெனடிக்ட் திருத்தந்தைக்காக  இரங்கல் தெரிவிப்பதற்கு கொழும்பு அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு ஜனாதிபதி விஜயம் 

 

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் திருத்தந்தை இறைபதமேந்தியதையொட்டி அவருக்காக இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (04) முற்பகல் கொழும்பிலுள்ள அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு விஜயம் செய்தார்.


இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக்க தூதுவர் புனித பிரையன் உடேக்வேயைச் சந்தித்த ஜனாதிபதி, அவருடன் சிறு உரையாடலில் ஈடுபட்டார்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் , அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நூலில் குறிப்பொன்றையிட்டதுடன், பதினாறாம் பெனடிக்ட் பரிசுத்தப் பாப்பரசரின் புகைப்படத்திற்கும் அஞ்சலி செலுத்தினார்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2022-01-04

No comments

Powered by Blogger.