Header Ads



போதைப்பொருளை மாணவர்களுக்கு விநியோகித்தவன் கைது



- பாறுக் ஷிஹான் -


ஹெரோயின் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு   விநியோகித்து வந்த    சந்தேக நபரை   கைது செய்துள்ள  கல்முனை விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை(24)  மாலை    நிந்தவூர்  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  தியேட்டர்   வீதியில்   வைத்து   சந்தேக நபர்    விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.


இவ்வாறு கைதான நபர்   அதே பகுதியை   சேர்ந்த  25 வயது  மதிக்கத்தக்கவர்  என்பதுடன் சந்தேக நபர்   வசம் இருந்து  ஹெரோயின்  போதைப்பொருள் 1 கிராம் 50 மில்லிகிராம்  விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


 கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட  சான்று பொருட்களுடன்  நிந்தவூர்   பொலிஸாரிடம்  நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.