Header Ads



பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி இடையிலான சந்திப்பு


எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையிலான சந்திப்பு இன்று (08) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.


ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன,மற்றும் சாகல ரத்நாயக்க, ரவி கருணாநாயக்க, பாலித ரங்கே பண்டார, ருவான் விஜேவர்தன,அகில விராஜ் காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.


சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதன் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, சாகர காரியவசம், ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.


இந்த வாரத்தில் இரு கட்சிகளின் மாவட்டத் தலைவர்களுடன் கலந்துரையாடி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க இரு தரப்பினரும் தீர்மானித்துள்ளனர்.


எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இரு கட்சிகளுக்கும் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இதுவாகும்.

No comments

Powered by Blogger.