Header Ads



ஐக்கிய மக்கள் சக்தியில் இணையும் பொதுஜன பெரமுனவினர்


பிங்கிரிய பிரதேச சபை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் லெஸ்லி குமார இன்று(09) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டார்.


இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டுப் பிரதானி நளின் பண்டார அவர்களும் கலந்து கொண்டார்.


அம்பாறை மாவட்டம் அம்பாறை தேர்தல் தொகுதி,நாமல் ஓயா பிரதேச சபை பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஞானதிலக்க அவர்கள் நேற்று(08) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.



No comments

Powered by Blogger.