Header Ads



கூட்டாகவும் தனித்தும் களமிறங்க திட்டமிட்டுள்ள முஸ்லிம் கட்சிகள் சஜித் தரப்புடன் பேச்சு


(எஸ்.என்.எம்.சுஹைல்)


உள்­ளு­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்கள் எதிர்­வரும் 18 ஆம் திகதி புதன்­கி­ழமை முதல் 21ஆம் திகதி சனிக்­கி­ழமை வரை ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என தேசிய தேர்­தல்கள் ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை எதிர்­வரும் மார்ச் மாதம் 10 ஆம் திக­திக்கு முன்னர் நடத்த ஆணைக்­குழு உத்­தே­சித்­துள்­ளது.


இந்­நி­லையில், உள்­ளூ­ராட்சி தேர்­தலில் பிர­தான கட்­சி­க­ளுடன் கூட்­ட­ணி­ய­மைத்து போட்­டி­யி­டு­வதா அல்லது தனித்து போட்­டி­யி­டு­வதா என முஸ்லிம் கட்­சிகள் உள்­ளக ரீதியாகவும் ஏனைய கட்­சி­க­ளுடனும் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டுள்­ளன.


வேட்புமனு தாக்கல்

அறிவிப்பு

24 மாநகர சபைகள்,41 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளுக்கான நகரபிதா,பிரதி நகர பிதா, தலைவர், பிரதி தலைவர் மற்றும் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வதை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கமைய தேர்தலுக்கான வைப்பு பணத்தை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை நேற்று ஆரம்பமானதுடன், 20 ஆம் திகதி பணம் வைப்பிடல் நிறைவு பெறும் (நாளை 06 போயா விடுமுறை,எதிர்வரும் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை,15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தவிர).


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனுக்களை பொறுப்பேற்பது நிறைவு பெறும்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.


முஸ்லிம் காங்­கிரஸ்

முஸ்­லிம் ­காங்­கிரஸ் கட்சி பெரும்­பாலும் தனித்துப்போட்­டி­யி­டு­வ­தற்­கான முஸ்­தீ­பு­க­ளையே மேற்­கொண்­டு ­வ­ரு­வ­தா­கவும் நேசக் கட்­சிகள் மற்றும் ஐக்­கிய மக்கள் சக்­தி­யுடன் கூட்­டணி அமைப்­பது குறித்தும் தீர்­மா­னங்கள் எடுப்­ப­தற்கு வாய்ப்பு இருப்­ப­தாக அதன் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், முஸ்லிம் காங்­கிரஸ் கட்சி மட்­டத்தில் உள்­ளூ­ராட்சி தேர்தல் குறித்த பேச்­சுகள் மும்­மு­ர­மாக இடம்­பெற்று வரு­கின்­றன. பெரும்­பாலும் நாம் தனித்து போட்­டி­யி­டு­வ­தற்­கான தீர்­மா­னங்­க­ளையே எடுத்து வரு­கின்றோம். கூடு­த­லான இடங்­களில் தனித்தே போட்­டி­யி­ட­வுள்ளோம். அத்­தோடு, கடந்த உள்­ளூ­ராட்சி தேர்­த­லின்­போது நாம் கூட்டு சேர்ந்து போட்­டி­யிட்ட இடங்­களில் இம்­மு­றையும் கூட்­டணி அமைக்க எதிர்­பார்க்­கிறோம்.


நாம் இப்­போது ஐக்­கிய மக்கள் சக்தி கூட்­ட­ணி­யில்தான் இருக்­கிறோம். பிர­தான கட்­சி­க­ளுடன் கூட்­டணி அமைப்­ப­தாயின் அக்­கட்­சி­யு­ட­னேயே கூட்­டணி அமைப்­ப­தற்கு வாய்ப்­புகள் இருக்­கின்­றன. என்­றாலும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு, மலை­யகக் கட்­சிகள் பேச்­சு­வார்த்தை நடத்­தினால் அவர்­க­ளுடன் கூட்­டணி அமைத்து போட்­டி­யி­டு­வ­தற்­கான சந்­தர்ப்­பங்­களும் இருக்­கின்­றன. எனினும் நாம் கூட்­ட­ணி­ய­மைப்­ப­தற்­காக விதிக்கும் நிபந்­த­னை­களை ஏற்­கும்­பட்­சத்தில் அவர்­க­ளுடன் கூட்­ட­ணி­ய­மைப்போம்.


முஸ்லிம் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து போட்­டி­யி­டு­வது குறித்தும் சிலர் எம்­மோடு பேசி வரு­கின்­றனர். கட்­சிகள் பேசும்­பட்­சத்தில் இந்த விடயம் தொடர்­பா­கவும் நாம் ஆராய்ந்து தீர்­மா­னத்­துக்கு வருவோம் என்றார்.


அகில இலங்கை

மக்கள் காங்­கிரஸ்

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் அம்­பா­றை­யிலும் திரு­கோ­ண­ம­லை­யிலும் தனித்து போட்­டி­யி­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் அதி­க­மாக இருப்­ப­தா­கவும் ஐக்­கிய மக்கள் சக்­தி­யுடன் கூட்­டணி அமைப்­ப­தற்கு சாத்­தியம் இருப்­ப­தா­கவும் அக்­கட்­சியின் செய­லாளர் வை.எல்.எஸ்.ஹமீட் தெரி­வித்தார்.


அவர் மேலும் தெரி­விக்­கையில், கட்­சியின் தலைவர் தற்­போது வெளி­நாட்டு பய­ண­மொன்றை மேற்­கொண்­டுள்ளார். அவர் நாடு திரும்­பி­யதும் உள்­ளூ­ராட்சி தேர்தல் தொடர்­பான பேச்­சுகள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. எனினும் நாம் ஏற்­க­னவே எடுத்த நிலைப்­பா­டு­க­ளுக்கு அமைய கிழக்கு மாகா­ணத்தில் கூடு­த­லாக தனித்து போட்­டி­யி­டு­வ­தற்­கான வாய்ப்பு காணப்­ப­டு­கின்­றது. அத்­தோடு, வடக்கு, கிழக்­குக்கு வெளியே ஐக்­கிய மக்கள் சக்­தி­யுடன் இணைந்து போட்­டி­யிட வாய்ப்பு இருக்­கி­றது. எனினும் கட்சி மட்­டத்தில் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தியே இறுதி தீர்­மா­னத்­திற்கு வருவோம். மேலும், ஏனைய கட்­சி­க­ளு­டனும் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­த­வுள்ளோம் என்றார்.


தேசிய காங்­கிரஸ்

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் குறித்த எந்த தீர்­மா­னமும் இது­வரை மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என தேசிய காங்­கிரஸ் கட்­சியின் முக்­கி­யஸ்தர் ஒருவர் குறிப்­பிட்டார்.

அத்­தோடு, கடந்த உள்­ளூ­ராட்சி தேர்­தலில் கிழக்கு மாகா­ணத்தில் தாம் தனித்தே போட்­டி­யிட்டு அம்­பாறை மாவட்­டத்தில் இரண்டு சபை­களை கைப்­பற்­றி­ய­தா­கவும் இம்­மு­றையும் பெரும்­பாலும் அதே தீர்­ம­ானத்தை எடுப்­ப­தற்­கான வாய்ப்­புகள் இருப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.


மேலும், கிழக்கு மாகா­ணத்­துக்கு வெளியே தேர்­தலில் போட்­டி­யி­டு­வது குறித்த எந்­த­வித உத்­தே­சமும் இல்லை எனவும் அவர் கூறினார்.


நல்­லாட்­சிக்­கான

தேசிய முன்­னணி

இது தேர்­த­லுக்­கான காலம் அல்ல, சக­லரும் ஒன்­றி­ணைந்து நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான சந்­தர்ப்­ப­மாக பயன்­ப­டுத்த வேண்டும். எனினும் தேர்தல் வேட்­பு­ம­னுக்­கான அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது. இந்­நி­லையில் எதிர்­வரும் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி தயா­ராக உள்­ள­தாக அக் கட்­சியின் தேசிய அமைப்­பாளர் பீ.எம்.முஜீபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.


கட்சி மட்­டத்தில் தனித்து போட்­டி­யி­டு­வது குறித்தும் கூட்­டணி அமைத்து போட்­டி­யி­டு­வது குறித்­த­து­மான நிலைப்­பா­டுகள் இருக்­கின்­றன. எனினும், நாம் இன்னும் இறுதி தீர்­மா­னங்­க­ளுக்கு வர­வில்லை. தொடர்ந்து கட்சி மட்­டத்­தி­லான பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.


அத்­தோடு, ஐக்­கிய மக்கள் சக்­தி­யோடு உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் குறித்த பேச்­சு­வார்த்­தை­யொன்று தொடர்ச்­சி­யாக நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது. மேலும், ஏற்­க­னவே தேசிய மக்கள் சக்­தி­யுடன் இணைந்து போட்­டி­யி­டு­வது குறித்தும் நாம் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கிறோம். எனினும் இன்னும் இறுதி தீர்­மா­னத்­திற்கு வர­வில்லை என ந.தே.மு.வின் தேசிய அமைப்­பாளர் தெரி­வித்தார்.


ஐக்­கிய சமா­தான

கூட்­ட­மைப்பு

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் கிழக்கு மாகா­ணத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணியாக வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார்.


ஒவ்வொரு உள்ளூராட்சி பிரதேசங்களிலும் உள்ள சமூக நலன் பேணும் அமைப்புகள், அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், உலமாக்கள், இளைஞர்கள் இணைந்து இந்த மாற்றத்திற்கான பாதையை வடிவமைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த தேர்தலில் ஊழலற்ற, நேர்மையான வேட்பாளர்களை ஊர் கூடி ஒற்றுமையாக களமிறக்கி துணிவான செய்தியை வருங்கால சந்ததியினருக்கு சொல்ல முன்வருமாறு ஹசன் அலி கோரிக்கை விடுத்தார்.– Vidivelli

No comments

Powered by Blogger.