Header Ads



3 பிரதான கட்சிகள் மாத்திரம் தேர்தலுக்காக, எத்தனை பில்லியனை செலவிட உள்ளன தெரியுமா..?


உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், மூன்று பிரதான கட்சிகளுக்கு மாத்திரம் குறைந்தபட்சம் 72 பில்லியன் ரூபாவைச் செலவழிக்க வேண்டும் என்றும் , அந்த பணத்தைப் பயன்படுத்தி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் சுயாதீன பொருளாதார ஆய்வாளர்கள் குழுவொன்று அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது . 


மக்கள் படும் துயரங்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் அரசியல் கட்சிகள் உண்மையாகவே மக்களை நேசிப்பவையாக இருந்தால் அந்த பணத்தில் இந்த நேரத்தில் மக்களின் பசியை போக்க முடியாதது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர் . தேர்தலுக்காக அரசாங்கத்திற்கு ஆகும் செல்விற்கு மேலதிகமாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த செலவை ஏற்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அய்வாளர் குழு அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது ; 


உள்ளுராட்சி தேர்தலில் ஒரு வேட்பாளர் குறைந்தது முப்பது இலட்சம் ரூபாவைச் செலவு செய்கிறார் . என்று கருதினால் , அரசியல் கட்சிகள் களமிறக்கும் 8000 வேட்பாளர்களுக்கு 24 பில்லியன் அல்லது 2400 கோடி ரூபாவை செலவிட நேரிடும் என பொருளாதார ஆய்வாளர் குழு புள்ளிவிபர அறிக்கையை முன்வைத்துள்ளது . பொருளாதார ஆய்வாளர்களின் அறிக்கையின்படி மூன்று பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தலா 24 பில்லியன் ரூபா வீதம் 72 பில்லியன் ரூபாவை தேர்தலுக்காக செலவிடவுள்ளனர். 


பிரசுரங்கள் அச்சிடுதல் மற்றும் பிற செலவுகளைச் சேர்த்து ஒரு பணத்தை கொண்டு இந்த தொகையை கணக்கிட்டுள்ளனர் . இத்தொகை அரசாங்கம் சமூர்த்தி கொடுப்பனவுகளுக்கு செலவிடும் தொகையில் 50 சதவீதம் என்று தவித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் , கூறும் பொருளாதார ஆய்வாளர்கள் குழு , நாடு கடுமையான பொருளாதார ஆபத்தில் சிக்கித் முன்னுரிமையை உணர்ந்து பணியாற்றாவிட்டால் , இட்டுமொத்த நாட்டு மக்களும் அதை செலுத்த வேண்டுயேற்படும் . 


No comments

Powered by Blogger.