Header Ads



ஐஸுக்கு அடிமையானவர் பரிதாப மரணம் - 2 பிள்ளைகள் அநாதைகளாக, மனைவி விதவையாகினார்


மட்டக்களப்பைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய நபரொருவர் போதைப் பொருளுக்கு அடிமையாகி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


குறித்த நபருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய கடந்த செப்ரெம்பர் மாதம் 24 ஆம் திகதி புனர்வாழ்வுக்காக வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


இந்நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார்.


சட்ட வைத்திய அதிகாரியால் அவரது சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்திய போது அதிகரித்த ஐஸ் போதைப் பொருள் உட்கொண்டமையால் நுரையீரல் மற்றும் உடற்பாகங்களில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மரணமேற்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.