Header Ads



18 வயது இளைஞனின் செயற்பாடு


திருடப்பட்ட கடன் அட்டை தகவல்களைப் பயன்படுத்தி 55 இலட்சம் ரூபாய்க்கு மேல் பொருட்களை வாங்கிய குற்றச்சாட்டில் 18 வயது இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குருநாகல் தம்மலசூரிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இளைஞர் 5 இலட்சம் வெளிநாட்டு கடன் அட்டை பாவனையாளர்களின் தகவல்களை சேகரித்து, 90 கடன் அட்டைகள் மூலமே 55 இலட்சம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கியுள்ளார்.


கணினி, கமெரா, உணவு, மதுபானம் உள்ளிட்ட பொருட்களை அந்த பணத்தின் மூலம் அவர் வாங்கியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.