Header Ads



அடுத்த தேர்தலை எதிர்கொள்ள UNP தயார் - புதிய அமைப்பாளர்களையும் தேடுகிறது


 அடுத்த தேர்தலை எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியை தயார்படுத்தி வருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொதுச் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.


கட்சி அமைப்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


புதிய அமைப்பாளர்களை தேர்வு செய்ய பல கட்ட நேர்காணல்கள் நடத்தப்படும் என்றார்.


எதிர்கால தேர்தல்களில் புதிய முகங்களை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்கு ஏனைய கட்சிகளைச் சேர்ந்த பலர் ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


எனவே ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும்.


நாட்டை கட்டியெழுப்புவதற்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அரசியல் கட்சிகள் தனித்து போட்டியிட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.