Header Ads



அசாதாரணமான பரிசோதனை குறித்து விசாரணை ஆரம்பம்


நிதி மோசடி குற்றச்சாட்டில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் சட்டத்தரணியால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து, சிறைச்சாலைகள் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


சிறையில், தமது கட்சிக்காரர், அசாதாரணமான முறையிலான பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக்கூறி, திலினி பிரியமாலியின் சட்டத்தரணி, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார்.


இவ்வாறான நிலையில், குறித்த முறைப்பாடு தொடர்பிலும், அவருக்கு அசாதாரணமான முறையில் பரிசோதகைள் நடத்தப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணைகளை முன்னெடுப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.