Header Ads



இலங்கையின் மிக நீளமான பாடசாலைக் கொடியைச் சுமந்த ஸஹிரா நடைபவனி


மாவனல்லை ஸஹிராக் கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு ‘ஸஹிரா நடைபவனி’ கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி முதல் கோலாகலமான முறையில் மாவனல்லை நகரை வலம் வந்தது.


பழைய மாணவர்களின் உயரிய ஒத்துழைப்புடன் நடந்தேறிய இந்நடைபவனி பல காத்திரமான படைப்புகளுடன் மாவனல்லை நகரை வலம் வந்து ஸஹிராத்தாயின் பெருமையை உலகுக்கு பறைசாற்றியது எனலாம்.


நாலா பக்கங்களிலும் வந்து கல்வி கற்ற கல்லூரித்தாயின் மாணவர்கள் ஒன்று சேர கொண்டாடிய இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக இலங்கையின் அதிநீளமான பாடசாலைக் கொடி என்ற பெருமையைச் சுமந்த ஸஹிராத்தாயின் 244 மீற்றர் நீளமான பாடசாலைக் கொடி கல்லூரியின் 83rd batch (2016 A/L) இனால் தயாரிக்கப்பட்டு 150 ஸஹிரா மாணவர்கள் சுமந்து சென்று வரலாற்றுச் சாதனை படைத்தமை பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

1 comment:

  1. எல்லாச் சாதனைகளையும் முடித்துக் கொண்டு உலக சாதனையைச் சாதிக்க துணியைச் சுமந்து செல்கின்றனர் பாடசாலை மாணவர்கள். இதற்கு உலக சாதனையை இந்த மாணவர்கள் எதிர்பார்த்தால் சலவைக்காரனின் பணிக்குத்தான் முதன்முதலாக வெகுமதியளிக்கப்பட வேண்டும். இந்த மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்கும் ஆசான்கள் யார் என்பதை அறிந்து கொள்ள சமூகம் ஆவலுடன் இருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.