Header Ads



நாமல் ஒரு புரைலர் கோழி, மகிந்த மண் கவ்வ இதுவே காரணம்


கோட்டாபய ராஜபக்சவின் வீழ்ச்சிக்கு அவரது சகோதரனான பசில் ராஜபக்சவே பிரதான காரணம், அதேபோல் மகிந்த ராஜபக்சவின் வீழ்ச்சிக்கு அவரின் மூத்த மகனான நாமல் ராஜபக்சவே பிரதான காரணம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், "நாமல் ராஜபக்ச ஒரு புரைலர் கோழி. பிறந்த உடனே நாடாளுமன்றத்துக்கு வந்துவிட்டார்.


மகிந்த ராஜபக்ச உண்மையான தந்தை என்றால் அவர் நாமல் ராஜபக்சவை நல்ல பக்குவம் அடைந்த பின் அரசியலுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும்.


எத்தனையோ பணக்காரர்கள் தங்களது பிள்ளைகளை பேருந்தில் அனுப்பி அடிமட்டத்தில் இருந்து பழக்குகின்றார்கள்.


அப்போதுதான் தந்தையின் மறைவுக்குப் பின் அவரது நிறுவனத்தை அவரது பிள்ளைகள் வெற்றிகரமாகக் கொண்டு செல்வர். அவர்தான் சரியான தந்தை.


அப்படித்தான் அரசியலிலும். அடிமட்டத்தில் இருந்துதான் வர வேண்டும். தந்தை ஜனாதிபதி என்றதால் நாமல் நாடாளுமன்றதுக்கு வந்துள்ளார்.


மாமா என்று அழைத்தவர்களையெல்லாம் மச்சான் என்று அழைக்கத் தொடங்கினார். இறுதியில் மகிந்த மண்கவ்வினார்" என தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. ஆயிரத்தில் ஒரு அம்சம் தான் வௌிவருகின்றது. இன்னும் ஆயிரமாயிரம் இரகசியங்களைத் தெரிந்து கொள்ள பொதுமக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். மஹிந்த அன்கலுடன் சேர்ந்து பூருவன்ஸான நீங்கள் செய்து அடிமுடிகளின் பின்னணிகளையும் புரைலர் கோழிவை வைத்துக் கொண்டு கறுப்புப்பணத்தை வௌ்ளையாக்கிய பல முறைகளையும் சொன்னால்தான் பேச்சில் கொஞ்சமாவது உண்மையிருக்கும். பல விடயங்களில் உங்களுக்கு புரைலர்கோழியின் உதவியின்றி எதுவுமே ஆற்றமுடியவில்லை என பலர் கதைத்துக் கொள்கின்றனர். புரைலர் கோழி இப்போது கசந்து விட்டது போல் தெரிகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.