Header Ads



தோடம்பழத்தில் இருந்து மு.கா. வுக்கு பாய்ச்சல்


( எம்.என்.எம்.அப்ராஸ்)


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னால் மாளிகைக்காடு பிரதேச அமைப்பாளரும்,ஐக்கிய சமூக சேவை நலன்புரி ஒன்றியத்தின் தலைவரும், மாளிகைக்காடு மேற்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவருமான ஏ.ஆர்.முஹம்மட் பஸ்மீர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இன்று (17)இணைந்து கொண்டார்.


 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அம்பாரை மாவட்டத்திற்க்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் கட்சி தலைவர் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.


இதன் போது கல்முனை மாநகர பிரதி முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரஹ்மத் மன்சூர்,காரைதீவு பிரதேச பிரதேச சபை உறுப்பினரும்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாளிகைக்காடு அமைப்பாளர் எஸ்.எம்.இஸ்மாயில்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாளிகைக்காடு கிழக்கு வட்டார  அமைப்பாளர் எம்.எச்.நாஸர்,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் கட்சியின் அமபாரை மாவட்ட குழுச் செயலாளர் ஏ.சி.சமால்டீன் உட்பட பஸ்மீர் அவர்களின் இணைப்பு செயலாளர் எம்.எம்.றெஜிமீர் மற்றும் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.