Header Ads



டுபாயில் தங்கப் போகிறாரா கோட்டாபய..?


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வர் இன்று காலை அமெரிக்கா பயணமானதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன . 


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் மனைவி அயோமா ராஜபக்ஷ , அவரது மகன் , மருமகள் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது . 


எவ்வாறாயினும் , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவிடம் இது குறித்து வினவியபோது , அமெரிக்கா செல்லும் தனது முடிவை மாற்றிக் கொண்டு கோட்டாபய டுபாயில் தங்கியிருப்பார் என அவர் தெரிவித்துள்ளார் . 


முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாட்டு சுற்றுலா சென்றுள்ளதாகவும் உள்ளக தகவல் தரப்புகள் தெரிவிக்கின்றன . 

1 comment:

  1. இலங்கையில் முதுகெழும்பு உள்ள இலங்கையர்கள் இருந்தால் இந்த நாட்டு மக்களை வறுமைக்கோட்டின் கீழ் தள்ளிவிட்டு உலகம் சுற்றும் இந்தப்பாவிக்கு இந்த நாட்டின் அதிஉயர் நீதிமன்றத்தின் ஊடாக உச்சகட்டத்திலான தண்டனைக்கு உற்படுத்த அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வது அவர்களின் அடிப்படைக் கடமையாகும்.அந்தக் கடமையிலிருந்து எந்த ஒரு இலங்கைப் பிரஜையும் தப்பமுடியாது.

    ReplyDelete

Powered by Blogger.