Header Ads



ஒன்லைனில் நிரப்புவதற்கு வசதி (முழு விபரம் இணைப்பு)


இலங்கைக்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் அவசியமான வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒன்லைனில் நிரப்ப முடியும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 


இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களின் வருகை அட்டை மற்றும் நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்களின் புறப்பாடு அட்டைகளை ஒன்லைனில் பூர்த்தி செய்வதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


விமானப் பயணிகள், திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான 

www.immigration.gov.lk 

அல்லது 


https://eservices.immigrationgov.lk 


ஆகிய இணையதளங்கள் ஊடாக பயணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த அட்டையை ஒன்லைனில் நிரப்புவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.  


இது பயணிகளுக்கு எந்தவித சிரமமும் இன்றி குடிவரவு மற்றும் குடியகல்வு செயற்பாடுகளை முடிக்க உதவுகிறது என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.