Header Ads



நுவரெலியாவில் குவிந்துள்ள அரசியல்வாதிகள்


ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் புது வருட விடுமுறையை கழிப்பதற்காக நுவரெலியாவுக்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.


விடுமுறையை கழிப்பதற்காக சென்றுள்ள இவர்கள் நுவரெலியாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பங்களாவில் உள்ள அறைகளை முன்பதிவு செய்திருந்தனர்.


பங்களாவில் உள்ள அனைத்து அறைகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கியிருப்பதாக நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் சேவை பிரிவு தெரிவித்துள்ளது.


நுவரெலியாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பங்களா, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டுக்கு மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது.


இங்கு தங்கியிருக்கவும் சாப்பிடவும் மிக குறைவான கட்டணமே இவர்களிடம் அறவிடப்படுகிறது. ஜெனரல்ஸ் ஹவுஸ் என அழைக்கப்படும் இந்த பங்களா ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அதன் பிரதானிகள் தங்குவதற்காக நிர்மாணிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. TW

No comments

Powered by Blogger.