Header Ads



ஜனாஸாக்களை எரிக்குமாறு ஆலோசனை வழங்கிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்துங்கள் - பாராளுமன்றத்தில் முஜிபுர் ரஹ்மான் ஆவேசம்


(ஏ.ஆர்.ஏ.பரீல்)


கொவிட் தொற்றின் கார­ண­மாக உயி­ரி­ழந்­த­வர்­களின் ஜனா­சாக்­களை பல­வந்­த­மாக எரிக்க வேண்டும் என வலி­யு­றுத்தி சுகா­தார அமைச்­சுக்கு ஆலோ­சனை வழங்­கி­ய­வர்கள் குறித்து உட­னடி விசா­ரணை நடத்தி, இவ்­வாறு ஆலோ­சனை வழங்­கிய அதி­கா­ரிகள் யார் என்­பதை அவ­ச­ர­மாக வெளிப்­ப­டுத்த வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.


கொரோனாவில் மர­ணித்­தோரின் இறு­திக்­கி­ரி­யைகள் விட­யத்தில் சுகா­தார அமைச்சின் சில அதி­கா­ரிகள் வழங்­கிய தவ­றான ஆலோ­ச­னைகள் கார­ண­மாக நாட்டில்  இனங்­க­ளுக்­கி­டையில் பிரச்­சி­னைகள் உரு­வா­கி­ய­தாக சுதேச வைத்­தி­யத்­துறை இரா­ஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்­கொடி பாரா­ளு­மன்­றத்தில் கருத்து வெளி­யிட்­ட­தை­யடுத்து உரை­யாற்­றியபோதே ஐக்­கிய மக்கள் சக்தி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் இவ்­வாறு தெரி­வித்தார்.


வரவு செலவு திட்­டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவா­தத்தில், நேற்­று­முன்­தினம் சுகா­தார அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீடு தொடர்­பான விவாதம் இடம்­பெற்­றது. இதன்­போது, சுதேச வைத்­திய துறை இரா­ஜாங்க அமைச்சர் சிசிர ஜய­கொடி உரை­யாற்­று­கையில்,


கொவிட் தொடர்பில் மர­ணித்­த­வர்­களின் இறு­திக்­கி­ரி­யைகள் தொடர்பில் சுகா­தார அமைச்சின் சில அதி­கா­ரிகள் வழங்­கிய தவ­றான ஆலோ­சனை கார­ண­மாக நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் பிரச்­சி­னைகள் உரு­வா­கின. இவர்கள் தான் உடல்­களை தகனம் செய்ய வேண்டும் என ஆலோ­சனை வழங்­கி­னார்கள். முஸ்­லிம்கள் மீது எமக்கு வெறுப்­பினை உரு­வாக்­கி­னார்கள். சுகா­தார அமைச்சின் ஒரு சில விசேட நிபு­ணர்­களின் ஆலோ­சனை கார­ண­மா­கவே இனங்­க­ளுக்­கி­டையில் குரோதம் ஏற்­பட்­டது. கல­கங்கள் ஆரம்­ப­மா­கின.


இவ்­வா­றான விசேட வைத்­திய நிபு­ணர்கள் இளை­ஞர்­களின் போராட்ட (அர­க­லய) களத்­துக்குச் சென்று இனங்­க­ளுக்­கி­டையில் சம­நிலை பேணப்­ப­ட­வேண்டும் என்று கூறி­னார்கள். ஆனால் இந்த 225 உறுப்­பி­னர்கள் மீது குற்றம் சுமத்­தி­யி­ருக்­கி­றார்கள் என்றார்.

சுதேச வைத்­தி­யத்­துறை இரா­ஜாங்க அமைச்­சர் உரை­யாற்­றிய பின்னர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் பேசு­கையில்; சுதேச வைத்­தி­யத்­துறை இரா­ஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்­கொடி இங்கு உண்­மையைக் கூறினார்.


கடந்த காலத்தில் கொவிட்­டினால் இறந்­த­வர்­க­ளது இறுதிக் கிரியை தக­னமா? அல்­லது அடக்­கமா? என்ற பிரச்­சி­னையில் சுகா­தார அமைச்சின் சில அதி­கா­ரிகள் எமக்கு தவ­றான ஆலோ­சனை வழங்­கி­னார்கள். அவர்கள் சட­லங்கள் எரிக்­கப்­ப­ட­வேண்டும் என்று தீர்­மானம் நிறை வேற்­றி­னார்கள் என்று இரா­ஜாங்க அமைச்சர் இங்கு கூறியுள்ளார்.

நான் சுகா­தார அமைச்­ச­ரிடம் கேட்­கிறேன், உலக சுகா­தார ஸ்தாபனம் அவ்­வா­றான சட­லங்கள் தகனம் அல்ல அடக்கம் செய்­வ­தற்கு இட­ம­ளி­யுங்கள் என்று சிபா­ரிசு செய்­தி­ருந்­தது. இவ்­வா­றான சிபா­ரிசினை உலக சுகா­தார ஸ்தாபனம் வழங்­கி­யி­ருந்தும் உங்­க­ளது அர­சாங்கம் ஓர் இனத்­துக்கு முறை­யற்ற விதத்தில் ஜனா­ஸாக்கள் தகனம் செய்­யப்­ப­ட­வேண்டும் என்று கூறி பலாத்காரமாக உத்தரவிட்டது. யார் இவ்வாறான தவறான ஆலோசனையினை சுகாதார அமைச்சுக்கு வழங்கினார்கள் என்பது தொடர்பில் உடனடியாக விசாரணை ஒன்றினை நடத்தி அந்த அதிகாரிகளின் பெயர் விபரங்களை பகிரங்கப்படுத்த வேண்டுமென நான் வேண்டிக்கொள்கிறேன் என்றார்.– Vidivelli

No comments

Powered by Blogger.