Header Ads



டிக்கெட் வாங்கிக் கொடுக்க எவரும் இல்லையா..? முஸ்லிம் சமூகத்தின் அவசர கவனத்திற்கு...!



புத்தளத்தில் இருந்து... 

இலங்கை தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் 

மூன்று திறமையான இளைஞர்கள்....!

சர்வதேசத்தில்....

இந்தியா, பாகிஸ்தான், நேபாள் உற்பட 09 நாடுகள் பங்கேற்கும் தெற்காசிய போட்டியில்...

20 வயதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெல்லும் பொன்னான வாய்ப்பை பெற்றிருப்பவர்கள்...!

ஆனால்....

தடைகள் பல தாண்டி, முன்னேறி வந்த பாதையில்... 

இன்று, தனது அடையாளத்தை நிரூபிக்க... Just 'மூன்று விமான Ticket கள்' தடையாக இருக்கிறது...!

அழைப்பிதழ் கைகளில்.... போராட்டம் நெஞ்சினில்... 

10 ஆம் திகதிக்கு முன் பதிலளிக்க வேண்டும்...! 20 ஆம் திகதி பங்களாதேஷில் இருக்கவேண்டும்...!

அரசாங்கமோ... ஆழ்ந்த உறக்கத்தில்....

Medical / VISA செலவுகளைக்கூட பொறுப்பெடுக்காத தூரத்தில்...!

வாழ்வில் சிலபோது...

திறமைகளும் அடையாளங்களும் வறுமைக்குள் இறந்துவிடுகிறது...

கொண்டாடப்படவேண்டிய பல பொக்கிஷங்கள் தோண்டியெடுக்கப்படாமலேயே செத்துவிடுகிறது...!

மறுபக்கம்... 

முளைக்கத்துடிக்கும் முயற்சிகளின் இக்கட்டான தருணத்தில் செய்யப்படும் ஒரு உயர்ந்த உள்ளத்தின் உதவி, 

அவர்களது வாழ்வையே மாற்றிவிடுகிறது... என்றுமே மறக்க முடியாத இடத்தில் அமர்ந்துகொள்கிறது... 

உலகில் உருவான பல சாதனைகளின் அத்திவாரங்களின் கீழ்...

கண்ணுக்குத்தெரியாத கைகள் இருக்கின்றன... இறைவன் மட்டுமே அறிந்த ரகசியங்கள் இருக்கின்றன,,,!

இந்த இளைஞர்களுக்கும் இன்ஷா அல்லாஹ்... 

அத்தகு மனிதர்களை அல்லாஹ் காண்பிப்பான் என்ற நம்பிக்கையில்... துஆ செய்கின்றேன்...!

ஒரு 'சதகத்துள் ஜாரிஆ' என்ற வகையில்...

பலரது கண்களுக்கு இந்தப்பாக்கியத்தை பார்வைக்கு வைக்கின்றேன்...!!

----

புத்தளம் மரிக்கார் 

01-12-2022

No comments

Powered by Blogger.