Header Ads



25 கோடி பணத்தை வங்கிக் கணக்கில் வைத்திருந்த பெண், டுபாய்க்கு தப்பிச்செல்கையில் கைது


திட்டமிட்ட குற்றவாளியான “மத்துகம சஹான்” என்ற சஹான் அரோஸ் ஜயசிங்கவின் மனைவி டுபாய்க்கு தப்பிச்செல்வதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றிருந்த வேளையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.


25 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை வங்கிக் கணக்கிலும் வைப்பிலும் வைத்திருந்த மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று மத்துகம நீதவான் நீதிமன்றில் விமானப் பயணத்தடை உத்தரவைப் பெற்றதாகவும், அதன் பிரகாரம் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.