Header Ads



191 பேருடன் மக்காவுக்குச் சென்ற விமானம், இலங்கையில் வீழ்ந்து இன்று 46 வருடங்கள் பூர்த்தி


- சுதத்.எச்.எம்.ஹேவா -


டி.சி. 08 என்ற விமானம்  மஸ்கெலியா- ஏழுகன்னியர் மலைத்தொடரில் விபத்துக்குள்ளாகி இன்றுடன்  46 ஆண்டுகள் நிறைவடைகிறது.


1974ஆம் ஆண்டு டிசெம்பர் 4ஆம் திகதியன்று, இந்தோனேசியாவில், மார்டினா டி. சி. விமானம் 08 தனது பணியாளர்கள் மற்றும் யாத்திரிகர்கள் குழுவுடன் மக்காவுக்குச் சென்று கொண்டிருந்த போது ,- லக்ஷபான பிரதேசத்தை அண்டிய ஏழுகன்னியர் மலைத்தொடரில் விபத்துக்குள்ளானது.


இந்த விமானம் விபத்துக்குள்ளான போது, ​​அதன் பணியாளர் குழுவுடன் 191 பேர் விமானத்தில் பயணித்துள்ளடன், விபத்தில் பயணிகள் அனைவரும் உயிரிழந்தனர்.  இந்த விமான விபத்து இலங்கையில் நடந்த முதலாவதும் மோசமானதுமான  விமான விபத்து என்றும் பதிவு செய்யப்பட்டது.


விபத்துக்குள்ளான விமானத்தின் டயர் ஒன்று இன்றும் நோட்டன்பிரிட்ஜ் – விதுலிபுரு பொலிஸ் நிலையம்  முன்பாக நினைவுப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.