Header Ads



11 மாதங்களில் 497 கொலைகள், 3596 ஆட்கடத்தல் சம்பவங்கள்


2022 ஆம் ஆண்டில் கடந்த 11 மாதங்களில் 497 கொலை சம்பவங்கள் நடந்துள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் மூலம் உறுதியாகியுள்ளதாக பேராதனை பல்லைக்கழகத்தின் பொருளாதார அறிவியல் மற்றும் தொகை கல்விப்பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.


இந்த கொலைகளில் 46 சதவீதமான கொலைகள் அதாவது 223 கொலைகள் துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல்கள் மூலம் நடந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.


இதனிடையே கடந்த 11 மாத காலத்தில் கப்பம் பெறும் நோக்கில் 3 ஆயிரத்து 596 பேர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.


இந்த ஆட்கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கையானது 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது2022 ஆம் ஆண்டின் கடந்த 11 மாதங்களில் 2 ஆயிரத்து 800 ஆக அதிகரித்துள்ளது.


கடந்த 2021 ஆம் ஆண்டில் 835 ஆட்கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் வசந்த அத்துகோரள மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.