Header Ads



கோட்டாபயவை ஆக்கிரமித்திருந்த கறுப்பு சந்தை வர்த்தகர்கள்


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கறுப்பு சந்தை வர்த்தகர்கள் ஆக்கிரமித்திருந்ததாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


கறுப்புச் சந்தை வர்த்தகர்களுக்கு அடிபணிந்துள்ள அரசியல்வாதிகளை கொண்டு நாட்டை முன்னேற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


அத்துடன் தேர்தலுக்கு போட்டியிட முன்னர் அரசியல்வாதிகள் தமது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்துவது தொடர்பான சட்டம் இயற்றப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.