Header Ads



யாழ் - கிளிநொச்சி முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுவேண்டி கொழும்புக்கு நடை பயணம் (வீடியோ)


 (அபூ அஸ்ஜத்)


யாழ், கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கண்டறிந்து அதற்கான தீர்வினை பெற்று தருமாறு வேண்டி கிளிநொச்சி மாவட்டத்தின் நாச்சிகுடாவில் இருந்து பேரணியாக இருவர் கொழும்பை நோக்கி பயணத்தை மேற்கொண்டனர். 


அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி இவர்கள் நடை பவனியாக கொழும்பினை நோக்கி புறப்பட்டு இன்றைய தினம் புத்தளத்தில் இவர்கள் தங்களுடைய பயணத்தை மேற்கொண்டதுடன்  அங்கு இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். 


கொழும்பினை அடைந்ததும் ஜனாதிபதியிடம் தங்களுடைய கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளிக்க போவதாக பேரணிகள் வந்தவர்கள் தெரிவித்தனர்.


No comments

Powered by Blogger.