Header Ads



பிரியமாலியுடன் தொடர்பை பேணிய பிரபலங்களுக்கு சிக்கல்


திலினி பிரியமாலி மேற்கொண்ட பாரிய நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (07) பிரபல நடிகை சங்கீதா வீரரத்னவிடம் சுமார் 5 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.


பிரியமாலி உடனான உறவு மற்றும் அவருடன் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் தொடர்பாக திலினியிடம் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் திருமதி சங்கீதா வீரரத்னவிடம் காணொளி காட்சியொன்றை முன்வைத்தபோது, ​​சிறிது நேரம் அவரால் எதுவும் கூற முடியாமல் தவித்ததாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது.


விசாரணையின் போது சங்கீதா வீரரத்ன வழங்கிய தகவல் தொடர்பில் மீள் விசாரணை நடத்தப்படும் எனவும் மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கருதினால் மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்படுவார் எனவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


திலினி பிரியமாலி உடனான நெருங்கிய தொடர்பு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பழம்பெரும் நடிகை செமினி இட்டமல்கொடவிடம் 4 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். மேலும் ஒரு புதிய நடிகையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இதுவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவில்லை.


மேலும் பிரபல அறிவிப்பாளர் தம்பதிக்கு வீடு வாங்குவதற்காக திலினி பிரியாமலி கொடுத்ததாக கூறப்படும் ஒன்றரை கோடி பணம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது . இந்த அறிவிப்பாளர் ஜோடியும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், முன்னாள் பிரதியமைச்சரும், மூத்த நடிகருமான ஜீவன் குமாரதுங்க தம்பதிகளிடம் கடந்த சனிக்கிழமை 5 மணித்தியாலங்கள் விசாரணை செய்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.


திலினி பிரியமாலிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையிலான உறவு மற்றும் திரைப்படம் தயாரிப்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கவனம் செலுத்தியதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. TL

No comments

Powered by Blogger.