Header Ads



குணதிலக்க மீதான சம்பவத்தில் என்னையும் இணைக்கிறார்கள் - நாமல் கவலை


அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீதான சம்பவத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாட்டை அரசியலாக்குவதன் மூலம் நாட்டின் நற்பெயருக்கும் கீர்திக்கும் மேலும் சேதம் ஏற்படும் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு விளையாட்டு நிர்வாகத்தில் தலையிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவை இட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

1 comment:

  1. நான் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்,விளையாட்டை முன்னேற்றுவது தவிர இது போன்ற பெண்களைக் கெடுத்தும் மோசமான செயல்களில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. நாட்டையும் மக்களையும் சூறையாடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் என்னை துப்பரவான, அர்ப்பணிப்புடன் செயற்படும் என்னை இதுபோன்ற அற்ப செயல்களில் சம்பந்தப்படுத்த வேண்டாம் என பொதுமக்களைக் கேட்டுக் கொள்கின்றேன். இன்னும் சொல்லப் போனால் நாம் யார் என்பதைச் சரியாக நீங்கள் விளங்கிக் கொள்ள விரும்பினால், இலங்கையின் அழகான நங்கைகளிடம் கேட்டால் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை உங்களுக்குச் சரியாகச் சொல்லித் தருவார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.