Header Ads



மீண்டும் நழுவியது இலங்கை

 


ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உக்ரைனுக்கு ரஷ்யா போர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட தீரமானத்தின் மீதான வாக்கெடுப்பை இலங்கை புறக்கணித்துள்ளது . 


இந்த தீரமானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது இந்தியா , பங்களாதேஷ் , பூட்டான் , பிரேசில் , எகிப்து , இந்தோனேசியா , இஸ்ரேல் , நேபாளம் , பாகிஸ்தான் , தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை . 


ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை நேற்று ( திங்கட்கிழமை ) உக்ரைனுக்கு யுத்த இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று ரஷ்யாவுக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது சேதம் , இழப்பு மற்றும் காயம் ஆகியவற்றிற்கான இழப்பீடுக்கான சர்வதேச பொறிமுறையை நிறுவுவதற்கான இந்த தீரமானத்துக்கு சுமார் 50 நாடுகள் இணை அனுசரணை வழங்கின . 


பொதுச் சபை என்பது அனைத்து 193 உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கிய ஐக்கிய நாடுகளின் பிரதிநிதித்துவ அமைப்பாகும் . இந்தநிலையில் உகரைன் தொடர்பான தீர்மானத்துக்கு 94 நாடுகள் ஆதரவாகவும் , 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன . 73 நாடுகள் வாக்களிக்கவில்லை . 


இந்த தீர்மானத்தை உக்ரேனிய தூதர் செர்ஜி கிஸ்லிட்சியா முன்வைத்தார் . 


இதன்போது சர்வதேச சட்டத்தை மீறியமைக்காக , ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார் . 20 ஆம் நூற்றாண்டின் கொடுங்கோன்மையின் வாரிசு என்று கூறிக்கொள்ளும் ரஷ்யா , தனது சொந்த போர் மற்றும் ஆக்கிரமிப்புக்கான விலையை செலுத்துவதைத் தவிர்க்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறது . அத்துடன் , தான் செய்யும் குற்றங்களுக்கான , பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார் . 


முன்னதாக , உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் தீரமானத்தை ரஷ்யா , வீட்டோ செய்ததைத் தொடர்ந்து பொதுச் சபையில் நேற்று இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டது .

No comments

Powered by Blogger.