Header Ads



பாராளுமன்றத்தில் எமக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் - ஆதிவாசிகள் போர்க்கொடி


இலங்கையின் பழங்குடியினரான ஆதிவாதி ஒருவர் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட வேண்டும் என ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஹெத்தோ தெரிவித்துள்ளார்.


தம்பானையில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


பதுளை,மொனராகலை,அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்நறுவை ஆகிய மாவட்டங்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆதிவாசிகள் உள்ளனர். அவுஸ்திரேலியாவில் ஆதிவாசிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.


நேபாளத்தில் ஆதிவாசிகள் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர். எமது நாட்டில் முதல் முறையாக ஆதிவாசி யுவதி ஒருவர் பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.


ஹென்னானிகல பகுதியில் வாழும் அந்த யுவதி எனது மருமகள். எனினும் இந்த நாட்டின் ஆரம்ப உரிமையாளர்களான பழைய குடியினரான ஆதிவாசிகளுக்கு இன்னும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.


இது குறித்து நான் நீண்டகாலமாக பேசி வருகின்றேன்.ஆதிவாசிகளின் பிரச்சினைகளை பற்றி பேச தனியான அமைச்சு ஒன்றை ஏற்படுத்துமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்தேன்.


ஆதிவாசிகள் பற்றி ஓரிரு வாரங்கள் பேசுவார்கள் அதன் பின்னர் மறந்து விடுவார்கள். பல இனங்களை பற்றி பேச நாடாளுமன்றத்தில் யாராவது இருக்கின்றனர்.


சில மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களும் இருக்கின்றனர். எனது நாட்டின் பழைய குடியினரான எம்மை பற்றி பேச நாடாளுமன்றத்தில் எவருமில்லை.


தற்போது கலாசார அமைச்சின் கீழ் ஆதிவாசிகள் தொடர்பான விவகாரங்கள் உள்ளன. அந்த அமைச்சு ஆதிவாசிகள் பற்றி மாத்திரம் செயற்படும் அமைச்சு அல்ல.


தோல்வியடைந்தவர்களும் தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்படுகின்றனர்-எமக்கும் நாடாளுமன்றத்திற்கு வர உரிமையுள்ளது


தேர்தலில் போட்டியிடாதவர்கள் மட்டுமல்லாது தோல்வியடைந்தவர்களையும் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்கின்றனர்.


எப்படியாவது அங்கு வந்து விடுகின்றனர். அப்படியானால், எமது பரம்பரையினரும் அவ்வாறு நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு உரிமையுள்ளது.


ஆதிவாசிகளின் பிரதிநிதி ஒருவர் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட வேண்டும் எனவும் ஊருவரிகே வன்னிலஹெத்தோ மேலும் தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.