Header Ads



போதைப் பொருளுடன் பிக்கு கைது


களுத்துறை புளத்சிங்கள பிரதேசத்தில் போதைப் பொருளுடன் பௌத்த பிக்கு ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


புளத்சிங்கள பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வரும் பிக்கு, புளத்சிங்கள- பரகொட வீதியில் நேற்று முன்தினம் 40 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.


பௌத்த பிக்கு ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துச் செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்டுள்ள பிக்கு மத்துகமை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர். twin

No comments

Powered by Blogger.