Header Ads



கை விலங்குடன் தனுஷ்க்க - இன்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவு


இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்க சிட்னி நீதிமன்றம் மறுத்துள்ளது. இதன் காரணமாக அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


தனுஷ்க குணதிலக்க இன்று -07- கை விலங்குடன் சிட்னி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.


இலங்கை அணியின் கிரிக்கெட் அணியின் வீரர்களுடன் 31 வயதான தனுஷ்க குணதிலக்க சசெக்ஸ் வீதியிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது அவுஸ்திரேலிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.


சிட்னி நகர பெடரல்  நீதிமன்றம் நேற்று குணதிலக்கவுக்கு பிணை வழங்க மறுத்துள்ளதுடன் இன்றைய தினம் அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். எனினும் அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மீண்டும் மறுத்துள்ளது.

No comments

Powered by Blogger.