Header Ads



பால் குடித்துவிட்டு உறங்கிய குழந்தை - வாயால், மூக்கால் இரத்தம் வந்த நிலையில் இறப்பு


யாழப்பாணம் - அல்லைப்பிட்டி 2 ஆம் வட்டாரத்தில், பிறந்து 42 நாட்களேயான ராயதீபன் டேனுயன் என்ற ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பால் குடித்துவிட்டு உறங்கிய குழந்தையை நேற்று (15) அதிகாலை பெற்றோர் பார்த்தபொழுது குழந்தை வாயால் மூக்கால் இரத்தம் வந்துள்ளது.


இதையடுத்து உடனடியாக குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.


மரண விசாரணைகளை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார். TM

No comments

Powered by Blogger.