Header Ads



கட்டுவன்வில் நற்பணி மன்றத்தின் மற்றுமோர் சமூக சேவைப்பணி


கட்டுவன்வில் கிராமத்தில் மார்க்க விளிமியன்களோடு எமது சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற நோக்கோடு மர்ஹூம் முஸ்தபா மறைக்கரின் மகன் அல்ஹாஜ்  m.m.m.காமின் (கலாசாலை இஸ்தாபக தலைவர்  ) அவர்களினால் உருவாக்கப்பட்ட புர்கானிய்யா பெண்கள் அரபு கலாசாலையின் பரிசளிப்பு விழா  கலாசாலை வளவில்  தலைவர்  அல்ஹாஜ்  m.m.m.காமின் தலைமையில்  நடைபெற்றது. 

இந்நிகலவின் முழுமையான  அனுசரணை கட்டுவன்வில் நற்பணி மன்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் இவ்விழாவின் பொது இம்மன்றத்தின் ஏற்பாட்டில் எமது கிராமத்தில் சிறந்த சமூக சேவையாளர்  விருது  அல்ஹாஜ்  m.m.m.காமின் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்  சமூக சேவை ஆர்வாளர்  விருது  N.P.மொகிதீன் பிச்சை  அவர்களுக்கும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

 

மேலும் இந்நிகழ்வில் கலாசாலை மாணவ மாணவிகளுக்கு நினைவு சின்னங்களும் பரிசில்களும் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த கலாசாலை விழாவுக்காக சிறப்பு அதிதியாக வெலிகந்த வைத்திய சாலையின் சுகாதார வைத்திய தலைமை வைத்திய அதிகாரி மாஹிர்  அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன்  கிராமத்தின் தலைவர்மார்கள் உலமாக்கள் பள்ளி பேஸ் இமாம்கள் கட்டுவன்வில நற்பணி மன்ற செயற்பாடு உறுப்பினர்கள்  m.m.மஹ்தீர் ,J.m.ஸாகிர் ,A.S.அலியார்  U.இஸ்ஸதீன் ,B.வசீம் மற்றும்  ஊடக அனுசரணையாளர் அஸ்சைஹ் பதுர்தீன்  மற்றும் கலாசாலை நிருவாகிகள்  mm.காமீன் ஹாஜி. செயலாளர் Al.ஹனீபா ba ற்றும் Ms.நௌபர் Ba. மற்றும் நிருவாக உறுப்பினர்கள் காலாசாலை அதிபர் அஸ்ஸைஹ் ஹனீபா மஜீதீ மற்றும்பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.  


இவ்விழாவுக்கான  நிதி சேகரிப்பு நற்பணி மன்றத்திம் தலைவர் PK.அசனார் அவர்களின் தலைமையில் மன்றத்தின் நிருவாகிகள் மற்றும் கடல் கடந்து பணிபுரியும்  அன்பு உறவுகளின் பங்களிப்போடு மேற்கொள்ளப்பட்டது       எனவே இந்நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்கு நிதி உதவி வழங்கிய அனைத்து சொந்தங்களுக்கும் மற்றும் இதனை நாட்டில் ஏற்பாடு செய்த நற்பணி மன்ற செர்பாட்டு குழுவினர்களுக்கும் எமது நற்பணி மன்றம் சார்பாக நன்றியை தெருவித்துக்கொல்கின்றோம்

Jawfer jp

No comments

Powered by Blogger.