Header Ads



5 நட்சத்திர ஹோட்டலில், பிக்குவின் மோசமான செயல்


கொழும்பில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பௌத்த பிக்கு ஒருவர் கட்டணங்களை செலுத்தாது தப்பிச் சென்றுள்ளார்.


கொழும்பு கோட்டே பிரதேச ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கடந்த 18 நாட்களாக குறித்த பௌத்த பிக்கு தங்கியுள்ளார்.


இவ்வாறு ஹோட்டல் தங்கியிருந்தமைக்காக செலுத்தப்பட வேண்டிய 527,820 ரூபாவை செலுத்தாது தப்பிச் சென்றுள்ளார்.


இவ்வாறு தப்பிச் சென்ற பௌத்த பிக்குவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.


கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி முதல் குறித்த நபர் நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார்.


பின்னர் திடீரென நோய்வாய்ப்பட்ட பௌத்த பிக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


ஹோட்டல் கட்டணங்களை செலுத்துவதாக கூறிய போதிலும் குணமடைந்த பின்னர் விஹாரைக்கு சென்று விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் ஹோட்டல் நிர்வாகம் முறைப்பாடு செய்திருந்தது. இதன் அடிப்படையிலேயே குறித்த பௌத்த பிக்குவை கைது செய்துள்ளனர்.  tamilwin

No comments

Powered by Blogger.