Header Ads



சாரா உயிருடன் உள்ளாரா..? 3 ஆவது DNA அறிக்கையும் பொருந்தவில்லை


(எம்.எப்.எம்.பஸீர்)


உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணை­களில் தொடர்ந்து மர்­ம­மாக உள்ள, நீர்­கொ­ழும்பு -கட்­டு­வ­பிட்டிய­ தேவா­ல­யத்தில் தாக்­குதல் நடாத்­திய மொஹம்­மது ஹஸ்தூன் எனும் குண்­டு­தா­ரியின் மனை­வி­யான புலஸ்­தினி மகேந்ரன் எனும் சாரா­வுக்கு என்ன நடந்­தது என்­பது தொடர்பில் வெளிப்­ப­டுத்த 3 ஆவது தட­வை­யா­கவும் மீண்டும் டி.என்.ஏ. பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்ட நிலையில், அது குறித்த பகுப்­பாய்­வுகள் நிறை­வ­டைந்­துள்­ளன. இந் நிலையில் குறித்த மூன்­றா­வது டி.என்.ஏ. பகுப்­பாய்வு பிர­கா­ரமும் சாரா உயி­ரி­ழந்­துள்­ள­மையை உறுதி செய்ய முடி­யாமல் போயுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.


குறித்த பகுப்­பாய்வு அறிக்கை விசா­ர­ணை­யா­ளர்­க­ளான சி.ஐ.டி.யின­ருக்கும், கல்­முனை நீதி­மன்­றுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள பின்­ன­ணியில், நம்­ப­க­ர­மான தக­வல்கள் ஊடாக மேற்­படி விட­யத்தை அறிய முடி­கி­றது.


கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்­த­ம­ருது – வெலி­வே­ரியன் பகு­தியில் வீடொன்றில் குண்­டினை வெடிக்கச் செய்து தற்­கொலை செய்­து­கொண்­ட­தாக நம்­பப்படும் , சஹ்­ரானின் சகோ­தரர் ரில்வான் தலை­மை­யி­லான குழு­வி­ன­ரு­டைய உடற் பாகங்கள், அம்­பாறை பொது மயா­னத்தில் புதைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், அவை கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி மீள தோண்டி எடுக்­கப்­பட்­டன.


கல்­முனை நீதி­வா­னிடம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட உத்­த­ர­வுக்கு அமைய இவ்­வாறு உடற்­பா­கங்கள்,அம்­பாறை நீதிவான் துஷாரா குமாரி தர்­ம­கீர்த்தி முன்­னி­லையில் இவ்­வாறு தோண்டி எடுக்­கப்­பட்­டன.


பின்னர் சட்ட வைத்­திய அதி­கா­ரிகள் தேவை­யான மாதி­ரி­களைப் பெற்­றுக்­கொண்­டுள்­ள­துடன், தற்­போது உடற்­பா­கங்கள் அம்­பாறை பொலிஸ் தட­ய­வியல் பிரி­வி­னரின் (சொகோ) பொறுப்பில் வைக்­கப்­பட்­டுள்­ளன. இந் நட­வ­டிக்­கைகள் அனைத்தும் பொலிஸ் ஸ்தல தட­ய­வியல் பிரி­வி­னரின் பங்­கேற்­புடன் இடம்­பெற்­றன. இந் நிலை­யி­லேயே இந்த உடற் பாகங்கள் மூன்­றா­வது டி.என்.ஏ. பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக கொழும்­புக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டன. அதன்­படி அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் திணைக்­க­ளத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட டி.என்.ஏ. பரி­சோ­த­னைகள் நிறை­வ­டைந்து அதன் பெறு­பேறு அடங்­கிய பகுப்­பாய்வு அறிக்கை, நீதி­மன்­றுக்கும், விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அரச இர­சா­யன பகுப்­பாய்வு திணைக்­கள தக­வல்கள் தெரி­வித்­தன.


உயிர்த்த ஞாயிறு தின குண்­டு­வெ­டிப்பு தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளி­லேயே சாரா தொடர்பில் முதலில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன. குறிப்­பாக கட்­டு­வா­பிட்­டிய தேவா­லய குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வத்தின் குண்­டு­தா­ரியின் மனைவி என அடை­யாளம் காணப்­பட்ட சாரா, அந்த குண்­டு­தா­ரியை காத­லித்து மதம் மாறி திரு­மணம் செய்­தி­ருந்தார்.


இந் நிலையில், 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்­கு­தல்­களை நடாத்­திய குண்­டு­தா­ரி­க­ளான சஹ்ரான் ஹஸீமின் மனை­வி, ஹஸ்­தூனின் மனை­வி உட்­பட மேலும் பலர் சாய்ந்­த­ம­ருது -வெலி­வே­ரியன் பகு­தியில் வீடொன்றில் மறைந்­தி­ருப்­பது தெரி­ய­வ­ரவே, அதனை சுற்றி வளைத்த போது, அங்கு இருந்த தற்­கொலை குண்­டு­தா­ரிகள் குண்­டு­களை வெடிக்கச் செய்து தமது உயிர்­களை மாய்த்­துக்­கொண்­டி­ருந்­தனர். அத­னை­ய­டுத்து இரா­ணு­வத்­தினர் முன்­னெ­டுத்த தேடு­தலில், சஹ்­ரானின் மனைவி ஹாதி­யாவும், அவ­ரது மகளும் படு­கா­ய­ம­டைந்த நிலையில் உயி­ருடன் மீட்­கப்­பட்­டி­ருந்­தனர். இந் நிலையில் சிகிச்­சை­க­ளி­டையே சஹ்­ரானின் மனை­வி­யிடம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் சி.ஐ.டி. சிறப்புக் குழு பல்­வேறு தக­வல்­களை வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்­தது.


இவ்­வா­றான பின்­ன­ணியில், சட்டத் தேவைக்­காக சாய்ந்­த­ம­ருது வீட்டில் தற்­கொலை செய்­து­கொண்டு உயி­ரி­ழந்த பயங்­க­ர­வாத கும்­ப­லைச்­சேர்ந்­த­வர்­களின் ஆள் அடை­யா­ளத்தை நிரூ­பிக்க, சஹ்­ரானின் மனைவி ஹாதி­யாவின் வாக்குமூலத்­தினை அடிப்­ப­டை­யாக கொண்டு டி.என்.ஏ. பரி­சோ­த­னைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. அதா­வது, சம்­பவ இடத்­தி­லி­ருந்து ஸ்தல தட­ய­வியல் பிரி­வி­னரால் அடை­யாளம் காணப்­பட்டு மீட்­கப்­பட்ட உயி­ரியல் கூறுகள், குண்டு வெடிக்கச் செய்யும் போது வீட்டில் இருந்­த­வர்கள் என சஹ்­ரனின் மனைவி ஹாதி­யாவின் வாக்கு மூலத்தில் குறிப்­பி­டப்­பட்­ட­வர்­களின் இரத்த உற­வு­க­ளிடம் பெறப்­பட்ட உயி­ரியல் கூறு­க­ளுடன் ஒப்­பீடு செய்­யப்­பட்­டன.


இதன்­போது ஹாதி­யாவின் வாக்கு மூலத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த அனை­வ­ரி­னதும் டி.என்.ஏ.க்கள் கண்­ட­றி­யப்­பட்டு அவர்­க­ளது இறப்பு அறி­வியல் ரீதியில் உறுதி செய்­யப்­பட்ட போதும், ஹாதியா பெயர் குறிப்­பிட்ட சாரா தொடர்பில் மட்டும் டி.என்.ஏ. பரி­சோ­த­னைகள் தோல்­வி­ய­டைந்­தன.

 – Vidivelli

1 comment:

  1. புலஸ்தினி மகேந்திரன் எனும் சாரா உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பதை துருவி ஆராயும் புலனாய்வுகள் நிச்சியமாக தற்கால ஆய்வுகளில் வௌிவராது. ஏனெனில் அவை அனைத்தும் பெரியதொரு நாடகத்தின் சிறிய அரங்கம். அந்த அரங்கம் தௌிவானால் நாடகம் தெருவுக்கு வந்துவிடும். அது சிலவேளை பாராளுமன்றத்தையே குழப்பியடித்துவிடும். அந்த நிலைக்கு வராமல் காப்பாற்றுவதுதான் தற்போதைய அரசின் நீண்டகாலத் திட்டம் போல் தெரிகிறது.

    ReplyDelete

Powered by Blogger.