Header Ads



பிரான்ஸ் நாட்டிற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது கிளை ஸ்தாபிக்கப்பட்டது


2022-2023 ஆம் நடப்பாண்டிற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் புலம்பெயர் வெளிநாட்டுக் கிளைகளை ஸ்தாபிக்கும் நிகழ்வுகளின் பிரான்ஸ் நாட்டிற்கான முதலாவது கிளை பாரிஸ் நகரில் இன்று (02) ஸ்தாபிக்கப்பட்டது.


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வு பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரன்சித் மத்தும பண்டார தலைமையில் இடம்பெற்றதோடு, இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ.சி.அலவதுவல மற்றும் நளின் பண்டார ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.