Header Ads



மௌனம் காக்கும் கோட்டாபய - பிரதமராக்க பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று ஆர்வம்


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை நாட்டின் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


ஆனால் அதே கட்சியின் மற்றொரு குழு தினேஷ் குணவர்தன தொடர்ந்தும் பிரதமராக இருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.


எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வது தொடர்பில் எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடப் போவதில்லை எனவும், மீண்டும் அரசியலில் பிரவேசிப்பது தொடர்பில் அவர் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. தோல்வியடைந்து அவருடைய தோல்வியையும் ஒப்புக் கொண்ட ஒருவரை மீண்டும் அரசியலுக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடுபவர்களை காலி முகத்திடலில் பகிரங்கமாக 69 இலட்சம் மக்களைக் கொண்டு கல்லடித்து பாடம் கற்றுக் கொடுக்குமாறு கேட்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.