Header Ads



குளிர்சாதனப்பெட்டியை திறந்த போது, மின்சாரம் தாக்கி பஸ்மியா வபாத்


மின்சாரம் தாக்கி இளம் தாயொருவர் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரம் மஸ்ஜிதுல் ஹைர் பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடொன்றிலே இந்த மரணச் சம்பவம் இன்று (1) மாலை இடம்பெற்றுள்ளது. 


குறித்த வீட்டுப் பெண்மணி குளிர்சாதனப்பெட்டியில் இருந்த பொருட்களை எடுக்க திறந்த போது குளிர்சாதனப்பெட்டியில் மின்னொழுக்கு ஏற்பட்டிருந்த காரணமாக மின்சாரம் தாக்கியதில் மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 


இவ்வாறு மரணமடைந்தவர் இரண்டு பிள்ளைகளின் தாயான அபூபக்கர் பஸ்மியா (35 வயது) என்பவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 


இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எச்.எம்.எம்.பர்ஸான்


1 comment:

  1. இன்னா லில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன், யாஅல்லாஹ் அந்த தாயின் பாவங்களை மன்னித்து ஜன்னாதுல் பிர்தவ்ஸில் சேர்த்து வைப்பாயாக, அன்னாரின் இழப்பால் வாடும் பிள்ளைகளுக்கு அன்னாரைவிடச் சிறந்த துணையை தாயை அருளுவாயாக.இது போன்ற இடர்கள் யாருக்கும் இதன்பிறகு வராது அனைவரையும் பாதுகாப்பாயாக.

    ReplyDelete

Powered by Blogger.