Header Ads



கோட்டாபய வெளியிடும் முதல் பதிவு - 2 மாதங்களுக்குப் பிறகு பேஸ்புக்கில் முகம் காட்டினார்


2022 ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வென்ற இலங்கை அணிக்கு  கோட்டாபய ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றனை வெளியிட்டு கோட்டாபய ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவைத்துள்ளார்.


" துபாயில் நடைபெற்ற ஆசியக்கிண்ண இறுதி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள். இல்ங்கை அணியினர் குழு காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் குழுப்பணி குறிப்பிடத்தக்கது " என கோட்டாபய ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, குறித்த டுவிட்டர் பதிவானது சிறிலங்காவில் வெடித்த மக்கள் புரட்சியை தொடர்ந்து அதிபர் பதவியிலிருந்து விலகியதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ச வெளியிடும் முதல் பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.