Header Ads



விகாராதிபதியின் சடலம் மீட்பு, இளம் பிக்கு டுபாய்க்கு தப்பியோட செல்ல முற்படுகையில் கைது


- Ismathul Rahuman -


சீதுவ பிரதேச விகாரையின் விகாராதிபதி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அங்கு தங்கியிருந்த இளம் பிக்க தலைமறைவான நிலையில் வெளிநாடு செல்ல முற்படுகையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

      ரத்தொழுவ, வேத்தேவ,முதுவாடிய வீதியில் அமைந்துள்ள சிறி நந்தாராமவிகாரையின் பக்கமிருந்து துர்வாடை வீசுவதாக பிரதேச வாசிகள் சீதுவ பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

     அதற்கினங்க புதன்கிழமை மாலை பொலிஸார் விகாரையின் உள்ளே சென்று பரிசோதித்த போது விகாராதிபதி மரணமடைந்த நிலையில் இருப்பதைக் கண்டுள்ளனர்.

      விகாரையினுள் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

   55 வயதான நெதகமுவே மஹாநாம விகாராதிபதியே கொலை செய்யப்பட்டுள்ளார்.

  அவ் விகாரையில் இருந்த 18 வயது இளம் பிக்கு  தலைமறைவாகியுள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகறாரே இக் கொலைச் சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

    தலைமறைவான சந்தேகநபரான ஏக்கல சுகதசிறி தேரர் நேற்று 15ம்திகதி அதிகாலை 1.00 மணிக்கு  EK- 649 இலக்க விமானத்தில் டுபாய் நாட்டிற்கு செல்ல முற்படுகையில் விமான நிலைய குடிவரவு, குடிஅகல்வு அதிகாரிகளினால் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார்.

  கைது செய்யப்பட்ட இளம் பெளத்த பிக்குவை அதிகாலை 4 .00 மணியளவில் சீதுவ பொலிஸாரிடம் ஒப்படைந்துள்ளனர்.

      கொலை செய்யப்பட்ட விகாராதிபதியின் பூதவுடல் பிரேத பரிசோதனைக்காக  நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

   சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.