Header Ads



இருதய சத்திர சிகிச்சைக்காக, அவசர உதவி கோருகிறார்


மேற்படி விடயமாக , இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டைப்பிரதேசத்தைச் சேர்ந்த தக்வா நகரை வசிப்பிடமாகக் கொண்ட 03 பிள்ளைகளின் தந்தையான எமது மஸ்ஜிதுல் தக்வா பள்ளிவாசலின் முன்னாள் தலைவரும், சமூக சேவையாளருமான சகோதரர் . அப்துல் வஹாப்தீன் லுக்மான் ( வயது 50 ) இருதய நோயினால் தீவிரமாக பாதிக்கப்பட்டு அவதியுற்று வருகின்றார் . 

குர்ஆனை மனனஞ்செய்து முடித்து விட்டு ஷரீஆ பிரிவில் கல்விகற்றுக்கொண்டிருக்கும் ஒரு பிள்ளையினதும்,  யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானப்பிரிவில் கல்வி கற்றுவரும் ஒரு பிள்ளையினதும் தந்தையான இவர் எமது தக்வா நகர் கிராமத்தில் மீன் பிடித்தொழிலாளர்கள் சங்கம் , தக்வா விளையாட்டு கழகம் ஆகிய அமைப்புகளை நிறுவுவதில் முன்னோடியாக இருந்து பல்வேறு சமூகசேவை செயற்பாடுகளில் பல வருடங்களாக ஈடுபட்டுவந்தார் . மேலும் இவர் எமது மஸ்ஜிதுல் தக்வா பள்ளிவாசலின் புதிய மஸ்ஜித் கட்டிட வேலைகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் . 


இவ்வாறு பிரபலமான ஒரு சமூக சேவையாளரே தற்பொழுது இருதய நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியர்களால் அவசரமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவேண்டும்  என கூறப்பட்டுள்ள நிலையில் இதற்கான சுமார் பதினாறு இலட்சம் ( 1600000 / = ) ரூபாய் தேவைப்படுகின்றது.  இதற்கு எந்தவித பொருளாதார வசதியும் இல்லாமல் இருந்து வருகின்றார்கள் . எனவே இவருடைய சத்திர சிகிச்சைக்காக உங்களால் முடியுமான பண உதவிகளை இவருடைய வங்கிக்கணக்கிற்கு தனவந்தரகள் , அறக்கொடையாளர்கள் , உதவும் மனம் படைத்த நல்லுள்ளங்களாகிய உங்கள் அனைவரிடத்திலும் எமது பள்ளிவாசல் நிருவாகம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.








No comments

Powered by Blogger.