Header Ads



மரண தண்டனையிலிருந்து விடுதலையான அரசியல்வாதிக்கு, விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யும் பொறுப்பு


பலாலி, மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யும் பொறுப்பு, துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.


துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால், தமது அமைச்சின் கீழான விடயதானங்கள் மற்றும் பணிகள், இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவுக்கு அதிவிசேட வர்த்தமானி மூலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, பலாலி, மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை விமான நிலையங்கள் உட்பட, அபிவிருத்தி தொடர்பாக அடையாளம் காணப்பட்ட எந்தவொரு உள்ளக விமான நிலையத்தையும் அபிவிருத்தி செய்யும் பொறுப்பு இராஜாங்க அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், காங்கேசன்துறை மற்றும் ஒலுவில் துறைமுகங்களின் அபிவிருத்தியும், இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.


அதேநேரம், துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் கீழுள்ள அனைத்து அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.